● ஆர். கார்த்திகேயன், விழுப்புரம்.
கடந்த ஒரு மாதத்தில் இருமுறை காக்கை என் தலையில் அடித்தது. இதனால் மரணம் சம்பவிக்குமா? பரிகாரம் என்ன?
ஜாதக தசாபுக்தியில் பாதகமான நிலையும், மாரகத்துக்குரிய கட்டமும் இருந்தால்தான் மரணம் சம்பவிக்கும். காக்கை அடித்தது உங்களுக்கு ஏழரைச்சனி அல்லது அட்டமச்சனி அல்லது கண்டச்சனி அல்லது அர்த்தாஷ்டமச்சனி அல்லது சனி தசை, சனி புக்தி இருப்பதை அறிவுறுத்துகிறது. விபத்து, வைத்தியச்செலவு அல்லது போலீஸ் கேஸ் வரலாம். வெள்ளி காக்கை உருவம் வாங்கி வெள்ளிக்கிழமை இரவு தலைமாட்டில் வைத்து படுத்துறங்கி, மறுநாள் காலையில் ஆறு மணிமுதல் ஏழு மணிக்குள் சனி ஓரையில் குளித்துமுடித்து காக்கை உருவத்தை நவகிரகத்திலுள்ள சனியின் பாதத்தில் வைத்து அர்ச்சனைசெய்து உண்டியலில் காணிக்கையோடு செலுத்தவும். சனி தனிச்சந்நிதியாக இருக்கும் இடத்திலும் மேற்படி பரிகாரம் செய்யலாம். அத்துடன் உங்கள் வயதுடன் ஒன்றுசேர்த்து அந்த எண்ணிக்கை அளவு மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் மண்விளக்கில் நெய் நிரப்பி, மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமேற்ற வேண்டும். அதுவும் சனிக்கிழமை ஒருமுறை.
● கமலி, பண்ருட்டி.
தங்கள் பதில்கள் நல்வழியைக் காட்டி நன்னெறிப்படுத்துகின்றன. நன்றிகள் பல! என் ஜாதகப்படி சனி, கேது இருப்பதன் பலன் என்ன? 7-ல் செவ்வாய், ராகு இருப்பது தோஷமா? திருமணம் எப்போது நடைபெறும்? அரசு வேலை கிடைக்குமா?
2019 ஜனவரியில் 22 வயது முடியும். மாங்கல்ய தோஷம் உண்டு. 14 வயது முதல் குரு தசை 16 வருடம். 30 வயதுவரை. இதன்பிறகுதான் முறையான திருமணமும் திருப்தியான மணவாழ்க்கையும் உண்டாகும். கலப்புத் திருமணம், காதல் திருமணம் நடக்க இடமுண்டு. மனதை அலைபாயவிடாமல் இருக்க வேண்டும். காதல் தோல்வி, காதல் ஏமாற்றம் ஏற்படலாம். பரிகாரம் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் 27 வயதில் திருமணம் செய்யலாம். நல்ல வேலைக்கும், நல்ல மணவாழ்க்கைக்கும் காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு காமோகர்ஷண ஹோமமும் பார்வதி சுயம்வரகலா ஹோமமும்செய்து கலச அபிஷேகம் செய்யவும். தொடர்புக்கு, செல்: 99942 74067. இத்துடன் 16 வகை ஹோமம் செய்ய வேண்டும்.
● எம்.எஸ். கோசல்ராம், செய்துங்கநல்லூர்.
தங்கள் ஜோதிடக்கணிப்பு மிகவும் பிடித்திருக்கிறது. எனது மகளின் மைத்துனர் கணேஷ்ராஜாவுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?
தன்வந்திரி பீடத்தில் கலச அபிஷேகம் செய்துவிட்டேன்.மிதுன லக்னம், 7-ல் சனி. கன்னி ராசிக்கு 7-ல் சூரியன். லக்னத்துக்கு 8-ல் செவ்வாய், ராகு, 2-ல் கேது. உத்திர நட்சத்திரம். 8-4-1990-ல் ஜனனம். 2018 ஏப்ரலில் 28 வயது முடிந்து 29 ஆரம்பம். ராகு தசை நடப்பு. தன்வந்திரி பீடத்தில் திருமணத்துக்காக ஹோமம் செய்திருப்பீர்கள். (கந்தர்வ ராஜஹோமம்). ராகு தசைக்கு சூலினிதுர்க்கா ஹோமமும், திருமணத்தடைக்கு காமோகர்ஷண ஹோமமும், நல்லமணவாழ்க்கை அமைய கந்தர்வ ராஜஹோமமும் மற்றும் 18 விதமான ஹோமம்செய்து கணேஷ் ராஜாவுக்கு கலச அபிஷேகம் செய்தால் 29 வயது முடிந்து 30 வயதில் திருமணம் நடக்கும். இல்லாவிட்டால் 33 வயதுக்குமேல்தான் (2023-க்கு மேல்) திருமணம் நடக்கும். மேற்படி ஹோமங்களை காரைக்குடி அருகில் சுந்தரம் குருக்களும் செய்வார். செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு பேசவும்.
● பி. ரமேஷ், பண்ருட்டி.
தங்களின் தொண்டு பாராட்டுக்குரியது. சிரம்தாழ்ந்த நன்றிகள்! என் அக்காள் மகள் ஜாதகமும் என் ஜாதகமும் அனுப்பியுள்ளேன். இருவரும் திருவோண நட்சத்திரம், மகர ராசி. திருமணம் செய்துகொள்ளலாமா? எனக்கு அரசுப் பணியா? சொந்தத் தொழிலா?
இருவருக்கும் திருவோண நட்சத்திரம், மகர ராசி என்பது சிறப்புதான்! ஆனால் நிஷாந்திக்கு 2035 வரை ராகு தசை. (34 வயதுவரை). ரமேஷுக்கு 2033 வரை குரு தசை. இதில் 2031 முதல் ராகு புக்தி வரும். சம ராகு சந்திப்பு பல கெடுதல்களை உண்டுபண்ணும். எனவே அக்காலம் மறக்காமல் இருவரும் சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஆயுஷ் ஹோமம் போன்ற பல ஹோமங்கள்செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் தடுப்பு ஊசி போட்டுக்கொள்வதுபோல கெடுதல்கள் விலகும். பிள்ளைகளுக்கும் படிப்பு, ஆயுள்விருத்திக்கும் ஹோமம் செய்துகொள்ளலாம். சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளலாம். முன்னதாக, நிஷாந்திக்கு 2035 வரை ராகு தசை நடப்பதால் திருமணத்துக்கு முன்பு சூலினிதுர்க்கா ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும், காமோகர்ஷண ஹோமமும் செய்து கலச அபிஷேகம்செய்து முடித்து 21 வயதில் திருமணம் செய்யலாம். உங்களுக்கும் அக்காள் மகளுக்கும் 11 வயது வித்தியாசம் உண்டு. உங்களுக்கு திருமணத்துக்குப் பிறகு சொந்தத் தொழில் யோகம் அமையும். அரசு வேலைக்கு இடமில்லை.
● எஸ். ஆதிலட்சுமி, சென்னை-106.
எனது மகன் பரந்தாமன் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார். சிறுவயதில் அவர் தாத்தா திடீர் யோகம் வரும் (40 வயதுக்குமேல்) என்றார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. +2 வரை படித்து லேப் டெக்னீஷியனாக இருக்கிறார். திருமணம் நடக்குமா? சொந்தத் தொழில் செய்யலாமா?
பரந்தாமன் உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னம். 43 வயது. 7-ல் சுக்கிரன் இருப்பதும், 7-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவதும் தோஷம். ராசிக்கு 7-க்குடைய சனி ராசிக்கு 12-ல் மறைவதும் தோஷம். எனவே களஸ்திர தோஷம் உண்டு. சூரியன் நீசம். தகப்பனாருக்கு "கிட்னி பெயிலியர்'; ஆயுள் பலமில்லை. தாயாருக்கும் ஜாதகருக்கும் உடம்பைப் படுத்திக்கொண்டே இருக்கும். மருந்தும் மாத்திரையும்தான் உணவாக அமையும். 40 வயதுமுதல் குரு தசை. குரு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தோஷம் விலகும் என்றாலும், அவர் அட்டமாதிபதி. உடல் ஆரோக்கியக்குறைவும், வருமானக்குறைவும் திருமணத்தடைக்குக் காரணம்! அவர் எப்போது திருமணத்தில் விருப்பம் இருப்பதாகக் கூறுகிறாரோ அப்போது திருமணம் செய்து வைக்கலாம். விவாகரத்கான பெண் அல்லது கணவனை இழந்த பெண் அமையலாம்.
● சுகுமார், ஈரோடு.
எனக்கு 37 வயது ஆகிறது. திருமணம் எப்போது நடைபெறும்? சொந்தத் தொழில் செய்யலாமா?
தனுசு ராசி, தனுசு லக்னம், பூராட நட்சத்திரம். ராகு தசை, சனி புக்தி. ஜென்மச்சனி. 7-ஆம் இடத்தை சனி பார்க்கிறார். அட்டமாதிபதி சந்திரனும் 7-ஆம் இடத்தைப் பார்க்கிறார். நவாம்சக் கட்டத்தில் சுக்கிரன் (களஸ்திர காரகன்) நீசம். தோஷம் அதிகம். வசதியிருந்தால் கோவை சேரன் மாநகரில் மீனாட்சிசுந்தரர்- செல்வவிநாயகர் கோவிலில் காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். அர்ச்சகர் யோகேஷ், செல்: 94430 64265-ல் பேசி ஏற்பாடு செய்யவும்.
● இசக்கி செட்டியார், தச்சநல்லூர்.
நான் 15 வயதுமுதல் என் தந்தைக்கு கடன் வாங்கிக் கொடுத்தேன். இன்று 47 வயதாகிறது. கடன் அடைபடவில்லை. அப்பா, அம்மா இறக்கும் வரை ஒன்றாக இருந்தேன் (கூட்டுக்குடும்பம்). உடன்பிறந்தோர் எல்லாம் தனியாகச் சென்றுவிட்டார்கள். எனது தொழில் செக்கு எண்ணெய்க் கடை! மூத்த மகன் ராஜஸ்தான் மாநிலத்தில் குற்றவியல் எம்.ஏ. படிக்கிறான். போலீஸ் அதிகாரியாவானா? இளைய மகன் நாதஸ்வரம் படிக்கிறான். எனது தொழிலுக்கு வருவானா?
விருச்சிக லக்னம், மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி. 10-க்குடைய சூரியன் 9-ல் இருந்தாலும் 10-க்கு 12-ல் மறைவு. ராகு- கேது சம்பந்தம். உங்கள் தொழிலுக்கு இரண்டு பிள்ளைகளும் வரமாட்டார்கள். தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால் உங்கள் தொழிலை நீங்களே லாபகரமாக செயல்படுத்தலாம். வீழ்ச்சிக்கு இடமில்லை.